Wednesday, December 7, 2011

பொது

இன்றைய நாளில் தமிழகமும் இந்தியாவும் சரியான வழிகாட்டுதலுடன் தான் செல்கின்றதா? கருணாநிதி அரசால் செய்யப்பட பலவிதமான ஊழல்களால் தமிழகத்தின் நிதி நிலைமை சீர்குலைந்து போய் விட்ட நிலையில் மக்களுக்கு ஜெயலலிதாவைத் தேர்ந்து எடுக்க வேண்டிய நிலைமை இருந்தது.
மக்களிலும் அனைவரும் வாக்குகளை பதிவு செய்யாமலே இருக்கும் வழக்கம் அதிகரிக்கிறது. மக்களின் வரிப்பணத்தை சரியான விதத்தில் மக்களுக்கு செலவு செய்யத்தான் அரசாங்கங்கள் இருக்கின்றன. அதை சரியான முறையில் பயன் படுத்துவது மக்கள் கையில் தான். பொது

Friday, August 26, 2011

ஊழல்

எல்லோருக்கும் வணக்கம். இந்த சமயத்தில் இந்தியாவில் ஊழலை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக சொல்லிக் கொண்டு உண்ணாவிரதம் செய்து கொண்டு சிலர் ஈடு பட்டு இருக்கிறார்கள். நாட்டின் பெருவாரியாக எல்லாப் பகுதியிலுமே இவர்களை ஆதரித்து சிலர் போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது உள்ள மத்திய அரசு முழுவதுமே அல்லது அதில் உள்ள பெரும்பான்மையானவர்கள் ஊழல்வாதிகளாகவும் நாட்டை தங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களாக உள்ளார்கள்.

Tuesday, January 4, 2011

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!